Latestமலேசியா

தாய்ப் மாமுட் மனைவி மீது விசாரணை – சரவா போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்

கூச்சிங், பிப் 5 – உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவா முன்னாள்கவர்னர் தாய்ப் மாமுட்டை சனிக்கிழமை இரவு மணி 11.56அளவில் அங்கிருந்து வெளியேற்றிய அவரது மனைவி தோ புவான் ராகத் குறிடி தாயிபிற்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சரவா போலீஸ கமிஷனர் டத்தோ மாஞ்சா அட்ட தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக புகார் ஒன்றை போலீஸ் பெற்றுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். இந்த புகார் தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றன. ஒருவரின் உயிருக்கு மிரட்டலை ஏற்படுத்தும் அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு மிரட்டலாக செயல்பட்டதன் தொடர்பில் இது தொடர்பாக விசாரண மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!