Latestமலேசியா

KNM குழும நிறுனத்தின் அலுவலகங்களில் பரிசோதனையா? புக்கிட் அமான் மறுப்பு

கோலாலம்பூர், டிச 15 – எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான KNM குழுமத்தின் அலுவலகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வெளியான தகவலை புக்கிட் அமான் வர்த்தக குற்ற விசாரணைத் துறையின் இயக்குனர் ரம்லி யூசுப் மறுத்தார். சில ஆவணங்களை பெறுவதற்காக மட்டுமே புதன்கிழமை தாங்கள் அந்த நிறுவனத்தின் அலுவலகங்களுக்கு சென்றதாக அவர் கூறினார்.

எங்களது விசாரணைக்காக சில ஆவணங்களை திரட்டுவதற்காக நாங்கள் KNM அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு எவரும் கைது செய்யப்படவில்லையென ரம்லி கூறினார். எனினும், அவர்கள் மேற்கொண்டுவரும் விசாரணையின் மேல் விவரங்கள் குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

KNM அலுவலகங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வாட்ஸஅப் புலனத்தில் வெளியான தகவலைத் தொடர்ந்து அதனை ரம்லி மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!