Latestமலேசியா

மாரா இளநிலை அறிவியல் கல்லூரியின் மாணவிகள் தங்கும் விடுதியில் ஊடுருவல் இனி மீண்டும் ஏற்படாது – மாரா தலைவர் உறுதி

கங்கார், நவ 7 – பெக்கானிலுள்ள மாரா இளநிலை அறிவியல் கல்லூரியின் மாணவிகள் தங்கும் விடுதியில் ஊடுருவல் நடந்திருப்பதாக வெளியான தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து விரைவில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என மாரா உறுதியளித்துள்ளது. அனைத்து மாரா கால்லூரிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை மாரா உறுதிப்படுத்தும் என அதன் தலைவர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

மாரா தொடர்பில் எந்தவொரு விவகாரமும் மூடி மறைக்கப்படாது. விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என்ற உறுதியை வழங்குவதாக அவர் கூறினார். எந்தவொரு புகார் தெரிவிக்கப்பட்டாலும் அதற்கு நாங்கள் பதில் அளிப்போம் என மாரா பெட்ரோனாசில் வாகன தொழில்முனைவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அசிரஃப் வாஜ்டி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!