கோலாலம்பூர், ஜன 3 – கடன் பெற்றவர்கள் 340 மில்லியன் ரிங்கிட் கடன் திரும்ப செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க விருப்பதாக தெக்குன் நேசனல் தலைவர் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார். நிறுவப்பட்ட நடைமுறைகளுக்கு கடன் வாங்கியோர் இணங்காமால் இருப்பதால் தெக்குனில் கடன் சுமை மோசமடைந்துள்ளது.
எங்கள் தற்போதைய நிலையில், எங்களிடம் ஏற்கனவே செலுத்தப்படாத RM340 மில்லியன் மோசமான கடன் உள்ளது. கடன் பெற்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த விவகாரம் செய்தியின்றி மறைந்துவிடும் . எனவே கடன் வாங்கியவர்களிடமிருந்து நிலுவைத் தொகையைக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தாம் தயங்கப்போவதில்லையென அப்துல்லா சானி கூறினார். கடன் பெற்றவர்களை கண்டறிவதற்காக கடன் வசூலிப்பு ஏஜெண்ட் பிரிவை அமைத்து 340 மில்லியன் ரிங்கிட்டை வசூலிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.