மேற்கு ஜாவா, டிச 2 – இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் தேர்வெழுதிக் கொண்டிருந்த மாணவிக்கு திடிரென பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவி கர்பமுற்றதற்கான அறிகுறியோ, அல்லது பிரசவத்திற்கான நேரம் வந்துவிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தேர்வெழுதிக் கொண்டிருந்த சமயம் திடிரென ஒரு சத்தம், அதனைத் தொடர்ந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டதாக தேர்வு அதிகாரியாக இருந்த ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தேர்வு மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டு மாணவர்கள் தேர்வு மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தரை முழுவதும் ரத்தமாக இருந்ததோடு, சம்பந்தப்பட்ட மாணவி தான் பிரசவித்த குழந்தையை கையில் ஏந்தியவாரு அமர்ந்திருந்ததாக அந்த ஆசிரியர் கூறியிருக்கின்றார். பின்னர் அம்மாணவி ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அக்குழந்தை நல்ல நிலையில் உள்ள நிலையில், குழந்தையின் குடும்பத்தின் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். அதே வேளை, அம்மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .