குவந்தான், பிப் 19- குவந்தான் கடலில் மூழ்கிய வங்காளதேச தொழிலாளியின் உடல் கம்புங் கெபேங்கிலுள்ள கடற்கரையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. நீந்திக்கொண்டிருந்தபோது அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் 30 வயதுடைய மட் ரஷீதுல் என்பவரின் உடல் தாம் ஆகக்கடைசியாக காணப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் கரையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக குவந்தான் OCPD துணை கமிஷனர் வான் மோஹட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.
மட் ரஷீதுல்லும் இதர இரண்டு நண்பர்களும் கரையியிலிந்து 100 மீட்டர் தெலைவில் நீந்திக்கொண்டிருந்தபோது அலையினால் அடித்துச் செல்லப்பட்ட போதிலும் அவரது நண்பர்கள் உயிர் தப்பினர். காணாமல்போன மட் ரஷீதுல்லின் உடல் பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டதாக வான் மோஹட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இதனிடையே ஜெராண்டுட் அருகே Sungai Kuala sat ட்டில் மூழ்கியதாக நம்பப்படும் 12 வயது முஸ்டாக்கின் ரிஸ்மான் என்ற சிறுவனை தேடும் நடவடிக்கை இன்று தொடரும் என Pahang தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பொது உறவு அதிகாரி Zulfadi Zakaria தெரிவித்தார்.