Latestமலேசியா

பேராவில் நாளை தமிழ்ப் பள்ளிமாணவிகளுக்கான காற்பந்து போட்டி

ஈப்போ, டிச 9 – பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக 12 வயதுக்கு கீழ்ப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவிகளுக்கான காற்பந்து போட்டி நாளை டிசம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஈப்போ புந்தோங்கில் உள்ள மெதடிஸ் தமிழ்ப்பளளி மைதானத்தில் நடைபெற விருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார். ஏற்கனவே இவ்வாண்டு அக்டோபர் மாதம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட காற்பந்துப் போட்டியில் 36 குழுக்கள் கலந்துக்கொண்டன. அப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாளை நடைபெறும் மாணவிகளுக்கான காற்பந்து போட்டியில் 15 குழுக்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன. இதில் வெற்றிப் பெறும் முதல் குழுவிற்கு 500 ரிங்கிட்டும் , இரண்டாம் இடத்தை பெறும் குழுவுக்கு 300 ரிங்கிட்டும் மூன்றாவது இடத்தை பெறும் குழுவுக்கு 300 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படும் என அமாலுடின் தெரிவித்தார். இப்போட்டியைக் காணவும் மாணவிகளுக்கு உற்சாகத்தை வழங்கவும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக்கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!