ஷா ஆலாம், டிச 10 – மலேசியாவில் நாசி லெமாக்கை தெரியாதவர்களே இல்லை எனலாம், அந்த அளவுக்கு அனைவருக்கும் பிடித்த நாசி லெமாக் எந்நேரத்தில் உண்ணக் கூடிய உணவாக மாறிவிட்டது.
இந்நிலையில் ஆசை ஆசையாக தான் வாங்கிய நாசி லெமாக் பொட்டலத்தை பிரித்த ஆடவர் ஒருவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
தான் வாங்கிய நாசி லெமாக்கில் வைக்கப்பட்டிருந்த முட்டையின் மஞ்சள் கருவில், உயிருடன் புழுக்கள் நெழிந்துக் கொண்டிருந்ததே அதற்கு காரணமாகும்.
இது குறித்த காணொளியை அவர் வெளியிட அது தற்போது வைரலாகியுள்ளது.
ஷா ஆலா, செக்ஷன் 20க்கு அருகே 5 ரிங்கிட்டுக்கு தான் வாங்கிய அந்த நாசி லெமாக்கில் வைக்கப்பட்ட முட்டையை பாதி சாப்பிட்டப் பிறகே அதில் புழு இருந்ததை உணர்ந்துள்ளார் அந்த ஆடவர்.
இந்த மறக்க முடியாத அனுபவத்தை அவ்வாடவர் தனது டிக் டோக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, வியாபாரிகள் தாங்கள் விற்கும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதோடு உண்ண அது பாதுகாப்பானதா என்பதையும் அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.