Latestமலேசியா

விபத்திற்குப் பின் கார் எரிந்தது; வயதான பெண்மணி மரணம், இரு சிறார்கள் உட்பட மூவர் காயம்

கோலாலம்பூர், பிப் 8 – தாப்பா, ஜாலான் பிடோர் லாமாவில் இன்று விடியற்காலை விபத்திற்குப் பின் புரோட்டான் சாகா கார் ஒன்று  தீயில் 98 விழுக்காடு சேதம் அடைந்ததைத் தொடர்ந்து  வயதான  பெண்மணி ஒருவர் மரணம்  அடைந்ததோடு இரண்டு சிறார்கள் உட்பட மூவர் தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.  இன்று அதிகாலை மணி  4.49 அளவில் நிகழ்ந்த அந்த   சம்பவத்தில்   காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி உயிரிழந்தாக  பேரா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின்  துணை இயக்குனர் சபரோட்ஸி நோர் அகமட் தெரிவித்தார்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்றடைந்தபோது  வயதான பெண்மணி ஒருவர் இறந்துவிட்டதாகவும்    மற்றொரு பெண்ணும்    5 மற்றும்  8 வயதுடைய   இரண்டு சிறார்களும் தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டதால்   அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக  சபரோட்ஸி கூறினார். இந்த விபத்தில்  அனைவரின்  உடமைகளும் தீயில்  அழிந்துவிட்டதால்  அவர்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லையென அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!