காஸா முனை , பிப் 9- காஸாவின் தென் பகுதி நகரான ராபாவில் இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள் மீண்டும் மூர்க்கத்தனமாக வான் தாக்குதலை நடத்தியுள்ளன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அமைதி திட்டம் தொடர்பில் எந்தவொரு முடிவும் இன்றி இஸ்ரேலுக்கான தமது அதிகாரப்பூர்வ வருகையை முடித்துக் கொண்டு வெளியேறிய பின்னர் மீண்டும் தாக்குதலை இஸ்ரேஸ் படைகள் நடத்தியுள்ளன.
அமைதி பேச்சுக்களுக்கான நிபந்தனைகளை ஹமாஸ் தரப்பு மறுத்துவிட்டதை தொடர்ந்து ராபாவில் மிகப் பெரிய நடவடிக்கைக்கு தயாராகும்படி தனது படைகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ராபாவில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்திருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் புதிய ராணுவ நடவடிக்கைக்கு நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.