Latestஉலகம்

இந்தியாவில் LLB தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் கையும் களவுமாக சிக்கினர்

உத்தர பிரதேசம், மார்ச் 3 – இந்தியா உத்தர பிரதேசத்தில் பரீட்சையின் போது காப்பியடித்த மாணவர்கள் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அங்குள்ள கல்லூரியில் LLB தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான் அச்சம்பவம் நிகழ்ந்தது.

ஆசிரியர்கள் இருக்கும் போதே மாணவர்கள் தைரியமாகக் காப்பிடியப்பது அவ்வீடியோவீல் தெரிகிறது.

மாணவர்கள், வழிகாட்டி நூல்களோடு, காப்பியடிக்க ஏதுவாக திருட்டுத் தனமாக உள்ளே எடுத்துச் சென்ற தாட்களையும் வைத்துக் கொண்டு, மேசைகளில் மும்முரமாக விடைகளை எழுதி வைக்கின்றனர்.

அதனைக் கண்ட மற்ற மாணவர்கள் தட்டிக் கேட்கவே, பிரச்னை வெடித்து அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சம்பவம் அறிந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

அவ்வகையில், தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி 26 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இவ்வேளையில், அங்கு வேறு இரு கல்லூரிகளிலும் அதே போல் பரீட்சையில் காப்பிடியத்த 37 மாணவர்கள் அதிகாரிகளிடம் சிக்கினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!