Latestமலேசியா

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் ஆதரவில் ரஹாத் உம்ரா 2024; 200 பேருக்கு உம்ரா கடமையை நிறைவேற்றும் வாய்ப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 19 – மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் ஆதரவில், மூன்றாவது முறையாக ரஹாத் உம்ரா 2024 சிறப்பு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்திட்டத்தின் கீழ் தேர்வுச் செய்யப்பட்டுள்ள 200 பேர், அடுத்தாண்டு ஜனவரி 18-ஆம் தேதி, உம்ராவுக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் தோன்றுனரும், தலைவருமான டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் ஆதரவில், முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ரஹாத் உம்ரா திட்டத்தில் 50 பேர் பங்கேற்ற வேளை; 2020-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை நூற்று பதினொரு பேராக அதிகரிக்கப்பட்டது.

இம்முறை, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 200 பேருக்கு ரஹாத் உம்ரா திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வேளை; அவர்கள் அனைவரும் முதல் முறையாக தங்கள் உம்ரா கடமையை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படுவார்கள் என அப்துல் மாலிக் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!