Latestமலேசியா

மலேசிய தொழிலாளர்கள் புதிய தொழில் திறனை பெறுவதற்கான முயற்சியை தொடர வேண்டும் – பிரதமர் அன்வார் வலியுறுத்து

புத்ரா ஜெயா, நவ 30 – மலேசிய தொழிலாளர்கள் புதிய தொழில் திறனை பெறுவதற்கான முயற்சியை தொடர வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசிய தொழிலாளர்களின் வேலை நெறிமுறைகள் மற்றும் தொழில் நிபுணத்துவம் குறித்து திருப்தியடைந்துள்ளனர். ஆனால் மலேசிய தொழிலாளர்கள் கூடுதலாக நிபுணத்துவத்தை கொண்டிருக்கவில்லை என கருதுகின்றனர். அவர்களது அந்த மனப்பான்மையை மாற்றுவதற்கான முயற்சியில் மலேசியர்கள் தொழில் திறன் முனைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு தொழிலாளர்களுக்கு இது ஒரு சவாலாக இருப்பதால் அவர்கள் தொழில் துறையின் தேவையை சமாளிப்பதற்கு கூடுதலான திறன்களை பெற்றிருக்க வேண்டும் என அன்வார் அறைகூவல் விடுத்தார். நமது தொழிலாளர்கள் சரியான தகுதிகளையும் வேலை கட்டொழுங்கையும் கொண்டிருக்கின்றனர் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தெரிவிக்க வேண்டும். அதற்குரிய ஆற்றலை பெற்றிருந்தால் மட்டுமே நமது தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்தை பெறமுடியும் என அன்வார் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!