கங்ஙார், ஜனவரி 3 – பெர்லீஸ், தாமான் முதியாராவிலுள்ள, வீடொன்றுக்கு பின்புறம், ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 30ஆம் தேதி காலை மணி 10.30 வாக்கில் அந்த ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வீட்டின் பின்புறம் வீசிய துர்நாற்றத்தை தொடர்ந்து, அவ்விடத்தை தோண்டி பார்த்த அவர் அங்கு, வெள்ளை துணியில் சுற்றப்பட்டு, அழுகிய நிலையில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்ததாக, கங்ஙார் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்சிஸ்டன்ட் கமிஷனர் யுஷரிபுதீன் முகமது யூசோப் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, மறுநாள் 24 வயது தனித்து வாழும் தாயான அந்த இந்தோனேசிய பணிப்பெண் கைது செய்யப்பட்டதை யுஷரிபுதீன் உறுதிப்படுத்தினார்.
டிசம்பர் 20ஆம் தேதி, வீட்டின் குளியலரையில் அக்குழந்தையை பிரசவித்த அப்பெண், அது அசைவின்றி இருந்ததால், 21ஆம் தேதி அதிகாலை மணி 6.30 வாக்கில், அட்டை வீட்டின் பின்புறம் அதனை புதைத்தகாக கூறப்படுகிறது.