கேரளா, மார்ச் 25 – இந்தியா, கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள, தரக்கால கோவில், திருவிழாவின் போது, இரு யானைகள் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
உள்நாட்டு நேரப்படி, கடந்த வெள்ளிக்கிழமை, இரவு மணி 10.30 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
குருவாயூர் ரவிகிருஷ்ணன் எனும் யானை “அம்மாதிருவடிக்கு” அணிவகுத்துச் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த புதுப்பள்ளி அர்ஜுனன் எனும் மற்றொரு யானையை நேருக்கு நேர் மோதித் தள்ளியது.
அதன் பின்னர், அவ்விரு யானைகளும், கட்டுக்கு அடங்காமல், அத்துமீறி கூட்டத்தில் புகுந்ததால், அங்கு கூடியிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.
அச்சம்பவத்தில், நால்வர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
எனினும், இரு யானைகளும், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
அச்சம்பவம் தொடர்பில் வைரலாகி இருக்கும் காணொளியின் கீழ், “ஒரு பக்கம் காட்டு யானைகள் மனிதர்களை கொல்கின்றன. மறுபக்கம், கடவுளை பிரியப்படுத்துகிறோம் என்ற பெயரில் யானைகளை மனிதர்கள் துன்புறுத்துகின்றனர்.” என இணையப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.