கோலாலம்பூர், டிச 11 – புத்ரா நிலையம் அருகே, பெண் கொமியூட்டர் மின்சார ரயில் தண்டவளத்தில் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயங்களுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று காலை 10.58 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அந்த ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த அப்பெண், ரயில் வரும் சமயம் தண்டவாளத்தில் குதித்துள்ளார். அதன் பின்னர் 11.20 மணியளவில் மீட்கப்பட்ட அப்பெண் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.