ஜோகூர் பாரு , பிப் 27 – ஜோகூர் ,பாசீர் கூடாங்கில் 4 ஆறுகள் தூய்மைக் கேட்டின் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கவலையளிப்பதாக ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெரிவித்திருக்கிறார். சுற்றுப் சூழல் துறை மற்றும் பாசீர் கூடாங் மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட ஆறுகளிலிருந்து அடிக்கடி மாதிரி நீரை எடுத்து பரிசோதனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
சுங்காய் தூகாங் பாது, சுங்காய் பிராம்பி, சுங்காய் பூலோ ஆகிய இதர மூன்று ஆறுகளும் தூய்மைக் கேட்டின் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார். சுங்காய் கிம் கிம்மில் ஏற்பட்ட சுற்றுப்புற தூய்மைக்கேடு சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட ஆறுகளில் சுற்றுப்புற தூய்மைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என லிங் தியான் சூன் கூறினார்.