அங்காரா, பிப்ரவரி 1 – துருக்கியேவில், பல நாட்களாக குளிக்காமலும், பல் துலக்காமலும் இருக்கும் கணவனை, விவாகரத்து செய்துள்ள பெண் ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்டுபத்தியுள்ளது.
அண்மையில், அந்த வழக்கு விசாரணை அங்காரா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததை அடுத்து, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அனடோலியாவை சேர்ந்த அப்பெண், தனது கணவனை விவாகரத்து செய்வதற்கான முக்கிய காரணமாக, அவர் பல நாட்களாக குளிக்காமல் இருப்பதையும், வாரம் ஓரிரு முறை மட்டுமே பல் துலக்குவதையும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, வாரம் ஐந்து நாளும், துவைக்காத ஒரே ஆடையை அவன் திரும்ப திரும்ப அணிவதோடு, துர்நாற்றம் வீசும் தேகத்தோடு வலம் வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால், அவர்களின் திருமணம் பின்னடைவை எதிர்நோக்க, அவ்வாடவன் தான் காரணம் என தீர்பளித்த நீதிமன்றம், இழப்பீடாக அப்பெண்ணுக்கு ஐந்து லட்சம் லீரா அல்லது 77 ஆயிரத்து 878 ரிங்கிட்டை வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.