Latestமலேசியா

மாநில அரசின் குத்தகைகளை பெறுவதற்கு கெடா காற்பந்து சங்கத்திற்கான நிறுவனத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்கப்பட்டதா? – சனுசி மறுப்பு

அலோஸ்டார் , ஜன 13 – கெடா மாநில அரசின் குத்தகைகளை பெறுவதற்கு கெடா காற்பந்து சங்கத்தின் நிறுவனத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்கப்பட்டதாக கூறப்படுவதை மந்திரிபெசார் டத்தோஸ்ரீ முஹம்மட் சனுசி முஹமட் நோர் மறுத்திருக்கிறார். “Darulaman Footbal Club Sdn Bhd”-ட்டின் உத்தேச பங்குகளை பெறுவதற்கு “Tulangis Sdn Bhd” வழங்கிய மற்றும் கடனின் ஒரு பகுதியே அந்த தொகை என அவர் கூறினார். 2020-ஆம் ஆண்டில் டத்தோடத்தோ முகமட் ஹசாருல் இஃப்தாஸ், “Tulangis Sdn Bhd” நிறுவனத்தை பிரதிநிதித்து “Darulaman Football Club Sdn Bhd” பங்குகளை வாங்குவதற்கு முன்வந்ததாக முஹம்மட் சனுசி தெரிவித்தார்.

வெளிப்படையாக இந்த பேச்சுக்கள் நடத்தப்பட்டதோடு 30 மில்லயன் மதிப்பிலான “Darulaman Football Club Sdn Bhd” பங்குகளை வாங்குவதற்கு 5 மில்லியன் ரிங்கிட் கடன் வழங்க “Tulangis” இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 2020 ஆம் ஆண்டில் கெடா காற்பந்து சங்க கணக்கில் அந்த 5 மில்லியன் ரிங்கிட் பட்டுவாடா செய்யப்பட்டதாக கெடா காற்பந்து சங்கத்தின் தலைவர் என்ற முறையில் வெளியிட்ட அறிக்கையில் முஹம்மட் சனுசி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!