கோலாலம்பூர், நவம்பர் 3 – இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பிரபலம் ஒருவருக்கு, ஒரு நாள் சிறைத் தண்டனையும், 400 ரிங்கிட் அபராதமும் விதித்து கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
31 வயது ருமைஷா யாஹ்யா எனும் அந்நபர், பேரங்காடி ஒன்றில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
நேற்று, நவம்பர் முதலாம் தேதி, மாலை மணி 4.30 வாக்கில், சூரியா கேல்சிசி பேரங்காடியில், நூற்று எட்டு ரிங்கிட் 18 சென் பெருமானமுள்ள, துணிகளை உலர வைக்க பயன்படுத்தப்படும் கம்பிகள், பற்பசை, போத்தல் குடிநீர் ஆகியவற்றை அவர் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அந்த பெண் பிரபலம், மூன்று நாட்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
யோகா ஆசிரியராக அவர், பொருட்களை தான் கொண்டு சென்ற பையில் போட்டுக் கொண்டு பேரங்காடியை விட்டு வெளியேற முயன்றுள்ளார். எனினும், பணியில் இருந்த பாதுகாவலர் அவரது பையை சோதனையிட்ட போது, அந்த பொருட்களை வாங்கியதற்கான “ரசீது” ஏதுமின்றி அவர் கையும் களவுமாக பிடிபட்டதாக கூறப்படுகிறது.