Latestமலேசியா

வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு தொழிற்சாலைகளும் காரணமாகும் – ஜொஹாரி கனி

கோலாலம்பூர், ஜன 6 – தங்களுக்கு வேலையில்லாமலேயே வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வருவதற்காக நிறுவனங்களை அரசாங்கம் நியாயமற்ற வகையில் தண்டிப்பதாக மலேசிய உற்பத்தியாளர்களின் சம்மேளனம் கூறியிருப்பதை தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர் ஜொஹாரி கனி நிராகரித்தார். மலேசிய உற்பத்தியாளர்களின் சம்மேளனம் வேலைவாய்ப்பு நிறுவனங்களை மட்டுமே குறைகூறக்கூடாது . நிறுவனங்களின் கோரிக்கை மற்றும் ஒத்துழைப்பு இன்றி வெளிநாடுகளின் தொழிலாளர்களை இங்கு கெண்டுவரும் சாத்தியம் இல்லையென்பதை ஜொஹாரி சுட்டிக்காட்டினார்.

இங்குள்ள பிரச்சினை என்னவென்றால், சில நிறுவனங்கள் தங்களுக்கு வேலை கிடைக்காமல் வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டைக் கோருகின்றன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் ஒதுக்கீட்டை மற்ற நிறுவனங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். இது மனித கடத்தல் அல்லது கட்டாய உழைப்பாக கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!