புத்ராஜெயா, நவ 23 – 4 மலாய் – முஸ்லிம் அமைப்புகள், தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழியை தொடர்பு மொழியாக பயன்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக கூறியிருக்கும் முடிவை தான் வரவேற்பதாக கூறியுள்ளார் துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங்.
எனவே, இனி பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழியை தொடர்பு மொழியாக பயன்படுத்த தடையில்லை என இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.