Latestசிங்கப்பூர்
விமானத்தில் சக பயணிகளிடமிருந்து $31,000 திருடிய சீன நாட்டுப் பயணி கைது
சிங்கப்பூர், டிச 18 – சிங்கப்பூருக்கு பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் 3 சக பயணிகளுக்குச் சொந்தமான 31,000 சிங்கப்பூர் டாலரை திருடியதாகப் பயணி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வியட்னாமிலிருந்து புறப்பட்ட Scoot விமானத்தில் பயணித்த சீனாவைச் சேர்ந்த 52 வயது ஆடவன் இந்த திருட்டுச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து அவன் கைது செய்யப்பட்டான்.
குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் மூன்று ஆண்டு வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.