ஈப்போ, மார்ச் 29 – 19 வயது மகளிடம் பாலியல் சேட்டைகளை புரிந்ததோடு, அவரை கற்பழித்த குற்றச்சாட்டை ஆடவன் ஒருவன் ஒப்புக் கொண்டுள்ளான்.
அந்த 38 வயது ஆடவனுக்கு எதிராக இன்று பேராக், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
முதலில், கடந்த பிப்ரவரி மாதம், பத்து காஜாவிலுள்ள, வீடொன்றில், இரவு மணி பத்துக்கும் 12-க்கும் இடைப்பட்ட நேரத்தில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இம்மாதம் 20-ஆம் தேதி, அதே இடத்தில், காலை மணி 8.30 வாக்கில் அவன் மீண்டும் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
குற்றவியல் சட்டத்தின் 376 உட்பிரிவு மூன்றின் கீழ் அவனுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேளை ; எட்டாண்டுகளுக்கு குறையாத அல்லது 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையுடன், பத்துக்கு குறையாத பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 17-ஆம் தேதி அறிவிக்கப்படும்.