
சென்னை, அக்டோபர்-30,
த.வெ.க எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியிலிருந்து மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றிவிடலாமா என, அதன் தலைவரும் நடிகருமான விஜய் யோசித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் பிரச்சாரத்தின் போது, தன்னைக் காண வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் அவரின் மனதில் தீராத வலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மிகவும் மனமுடைந்து போயிருக்கும் விஜய், ஆறாத வடுக்களோடு நீண்ட காலத்திற்கு தம்மால் அரசியல் கட்சியை வலிமையாக நடத்த முடியுமா, அல்லது அதற்கான சூழல் தான் அமையுமா என தீவிர யோசனையில் உள்ளாரம்.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் கூறியபோது, தனது அந்த யோசனைக் குறித்து வந்தவர்களிடம் விஜய் கருத்து கேட்டதாக தமிழகத்தின் தினமலர் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விஜயின் பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்சியுற்றதாகவும், ஆனால் கட்சியைத் தொடர்ந்து நடத்துமாறு வந்திருந்தவர்களும் த.வெ.க நிர்வாகிகளும் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கட்சி சார்பில் இச்செய்தி உறுதிபடுத்தப்படவில்லை; என்ற போதிலும், விஜய் முன்வைத்த காலை பின்வாங்க மாட்டார் என அவரின் தீவிர இரசிகர்களும் த.வெ.க தொண்டர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



