Latestமலேசியா

உடம்புபிடி மையங்களின் சேவை நேரத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை; மலாக்கா அரசு திட்டவட்டம்

மலாக்கா, டிசம்பர் 19-உடம்புபிடி மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் இயங்கும் நேரத்தை நீட்டிக்க எந்தத் திட்டமும் இல்லை என, மலாக்கா மாநில அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

அம்மையங்களுக்கு அதிகாலை 2 மணி வரை சேவையை நீட்டிக்க அனுமதி வழங்கப்படலாம் என சமூக ஊடகங்களில் பரவியுள்ள தகவல் வெறும் வதந்தியே என அது குறிப்பிட்டது.

இது போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பொது மக்களிடையே தேவையற்ற கவலை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் என, வீடமைப்பு – ஊராட்சி உள்ளிட்ட துறைகளுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் Rais Yasin கூறினார்.

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, உரிமங்கள் மற்றும் சிறப்பு அனுமதி கோரிக்கைகள் case-by-case அதாவது தனித்தனிச் சூழலை பொருத்தே சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் மாநில நிர்வாக மன்றங்கள் மூலம் பரிசீலிக்கப்படுகின்றன.

எனவே, அம்மையங்கள் இயங்கும் நேரத்தை ஒரேடியாக மாற்றும் எந்த புதிய கொள்கையும் இல்லை என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!