Latestமலேசியா

தென்னந்தோப்பை விபச்சார விடுதியாக்கிய வங்காளதேசிகள்; அம்பலப்படுத்திய ஈப்போ போலீஸ்

ஈப்போ, ஆகஸ்ட்-9- ஈப்போ சிம்பாங் பூலாயில் தனியார் தென்னந்தோப்பை வங்காளதேசிகள் கும்பலொன்று விபச்சார விடுதியாக்கியதை, போலீஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

Kampung Kuala Tujuh-வில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், 2 பெண்கள் 4 ஆண்கள் அடங்கிய அக்கும்பல் கைதானது.

குற்றச்செயல் தடுப்புக்காக சிறப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிம்பாங் பூலாய் போலீஸ், அந்தத் தென்னந்தோப்பில் தங்கும் வீட்டொன்றில் அக்கும்பல் விபச்சாரத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தது.

32 முதல் 49 வயது வரையிலான அந்த 6 பேரும் மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.

பொது இடத்தில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதோடு, முறையான பயணப் பத்திரத்தையும் அவர்கள் வைத்திருக்கவில்லை.

இதையடுத்து குற்றவியல் சட்டத்தோடு, குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணை நடக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!