Latestமலேசியா

பிரதமர் அன்வார் தொடங்கிய பணிகளை முடிப்பதற்கு அனுமதிப்பீர் குணராஜ் – வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 25- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடங்கிய பணிகளை முடிப்பதற்கு மக்கள் அனுமதிக்க வேண்டும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வலியுறுத்தினார்.

10 ஆவது பிரதமராக பதவியேற்றது முதல் உறுதியற்ற தன்மை, பலவீனமான நிர்வாகம் மற்றும் கோவிட் தொற்றுக்குப் பிறகு மீச்சிக்காக போராடும் பொருளாதாரம் ஆகியவற்றால் உடைந்த ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது தலைமையில் அமைப்பு சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஒரு புதிய நோக்கத்தைக் கொண்டு வந்துள்ளதை குணராஜ் சுட்டிக்காட்டினார்.

Madani பொருளாதார கட்டமைப்பு பில்லியன் கணக்கான வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்துள்ளது.

STR, SARA போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் இலக்கு மானியங்கள் மிகவும் தேவைப்படுபவர்களைச் சென்றடைகின்றன.

கல்வி, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன.

குறுகிய கால அரசியல் ஆதாயங்களால் அல்ல, நீண்டகால தேசிய நலனால் இயக்கப்படுகின்றன.

இந்த முன்னேற்றத்தை பிரதமர் தொடர்வதற்கு மக்கள் அனுமதிக்க வேண்டும் என இன்று வெளியிட்ட முகநூல் அறிக்கையில் குணராஜ் கேட்டுக்கொண்டார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!