Latestமலேசியா

மூடுபனி விவகாரம்: மேக விதைப்பு முறையை பரிசீலனை செய்யும் சிரம்பான் மாநில அரசு

சிரம்பான், ஜூலை 22 – சிரம்பான் மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய நிலையங்களில் காற்று மாசுபாட்டு குறியீடு (API) அளவீடுகள் தொடர்ந்து அதிகரித்தால், பொது விதைப்பு முறையை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகின்றது.

தேசிய மூடுபனி செயல் திட்டம் மற்றும் தேசிய திறந்தவெளி எரிப்பு செயல் திட்டத்தின் அடிப்படையில், சுற்றுச்சூழல் துறை (DOE) தலைமையகத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, மாநில மறுமொழித் திட்டம் அமல்படுத்தபட்டுள்ளது.

தொடர்ச்சியாக 24 மணிநேரத்திற்கு API 150 வரம்பைத் தாண்டியதால், உள்ளூர் அதிகாரிகள், தொழில்நுட்பத் துறைகள் மற்றும் பொது சுகாதாரப் பிரிவுகளின் முழு ஒருங்கிணைப்புடன், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவைச் செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, குறிப்பாக அதிக ஆபத்துள்ள விவசாயப் பகுதிகள் மற்றும் தொழில்துறை பகுதிகளில், ரோந்து மற்றும் அமலாக்கத்தை மாநில அரசு தீவிரப்படுத்தி வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் கூறியுள்ளார்.

மேலும், திறந்தவெளி எரிப்பு குறித்து DOE-யின் புகார் வரி மூலம் புகாரளிப்பதில் பொதுமக்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்றும், மேலும் நிலையான மற்றும் காலநிலைக்கு ஏற்ற எதிர்காலத்தை நோக்கிய அரசின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!