
ரவாங், ஜூன் 30 – இன்று காலை, ராவாங்கிலுள்ள பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ், ஜாலான் குண்டாங்கிலுள்ள பருத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால், அத்தொழிற்சாலை 90 சதவீதம் சேதமடைந்துள்ளதாக சிலாங்கூர் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்தவுடனேயே மீட்புப்பணி உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த ராவாங் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்குள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கூடுதல் உதவி வழங்குவதற்கு பெஸ்டாரி ஜெயா, சுங்கை பூலோ மற்றும் செலயாங் ஆகிய இடங்களிலிருந்தும் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP) பணியாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த தீ விபத்திற்கான காரணங்களை கண்டறிய சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் தங்களுடைய விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.