
கோலாலம்பூர், மே-25 – ரம்மியமான சூழலுக்கும் ருசியான உணவுக்கும் பெயர்ப்பெற்ற India Gate உணவகம் மலேசியாவில் தனது 11-ஆவது கிளையை வெற்றிகரமாக திறந்துள்ளது.
இன்று கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் பவிலியன் பேரங்காடியின் முதல் மாடியில் அக்கிளை திறப்பு விழா கண்டது.
India Gate நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சரவணன் சுப்ரமணியம் முன்னிலையில் அவரின் தாயார் ரிப்பன் வெட்டி பின்னர் கேக் வெட்டி உணவகத்தைத் திறந்து வைத்தார்.
வந்திருந்த பிரமுகர்களுக்கு சரவணன் சிறப்பு செய்து நினைவுப் பரிசும் வழங்கினார்.
திறப்பு விழா என்பதால் காலையில் 500 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்ட நிலையில்
இந்தியர்கள் மட்டுமின்றி மலாய் சீனர்கள் என மூவினத்தாரும் திரளாக வந்து அதனைப் பெற்றுக் கொண்டனர்.
இதுவரை திறந்துள்ள கிளைகளிலேயே இந்த பவிலியன் கிளை வித்தியாசமானதாகும்.
காரணம் பேரங்காடியினுள் முதன் முறையாக India Gate உணவகம் அமைந்துள்ளது.
இனி இது போன்று பேரங்காடியில் மேலும் ஏராளமான கிளைகள் திறக்கப்படடுமென சரவணன் தெரிவித்தார்.
இந்த பவிலியன் கிளையைப் பொருத்தவரை மூவின மக்களும் அதிகம் வந்து செல்வதால், மலாய் – சீன வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பன்முகத்தன்மையோடு புது புது உணவுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்