Latestமலேசியா

‘தளபதி திருவிழா’; விற்பனையாளர்கள் & branding செய்ய விரும்புவோருக்கு பெரிய வாய்ப்பு, இன்றே முந்துங்கள்

கோலாலாம்பூர், டிசம்பர் 21-வரும் சனிக்கிழமை டிசம்பர் 27-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கமே ‘தளபதி திருவிழா’ வால் களைக் கட்டவிருக்கின்றது.

அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகனின்’இசை வெளியீட்டு விழா, கலைநிகழ்ச்சி மற்றும் உணவுத் திருவிழா என முப்பெரும் விழாவாக இது அமையவுள்ளது.

இப்படி ஒரு பிரமாண்ட விழாவில் விற்பனை மற்றும் branding செய்யும் பெரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, உணவு விழாவுக்கான விற்பனைக் கூடார அமைப்பு, உணவு மற்றும் பானங்களின் அதிகாரப்பூர்வ பங்காளி நிறுவனமாக Colors of India கேட்டுக் கொண்டுள்ளது.

சனிக்கிழமை புக்கிட் ஜாலில் 80,000 முதல் 100,000 பேர் வரை திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது; அவ்வளவுப் பெரியக் கூட்டத்திற்கு போதுமான உணவும் பானங்களும் தேவைப்படுகின்றன; அதே சமயம், தங்களின் பொருட்களை விற்பனை செய்யவும், ஒரே இடத்தில் வைத்து பிரபலப்படுத்தவும் வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைகிறது.

எனவே, ஆர்வமுள்ள விற்பனையாளர்கள் இவ்வாய்ப்பினைத் தவற விடாது, தங்களைத் தொடர்புகொள்ளுமாறு Colors of India தலைவர் சத்தியா கேட்டுக் கொண்டார்.

இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர் விற்பனையாளர்களும் அதிகளவில் இணைந்திருக்கும் நிலையில், மிகப் பெரிய உணவுத் திருவிழாக இது அமையவிருக்கிறது.

ஆர்வமுள்ள விற்பனையாளர்கள் Colors of India-வின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்புகொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!