
ஷா ஆலாம், ஜூலை-19- ஷா ஆலாம், செக்ஷன் 24-ல் கால்வாயில் தவறி விழுந்ததாக நம்பப்படும் 2 சிறுவன்கள், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Jalan Cili Merah-வில் நேற்றிரவு 7 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து வந்துசேர்ந்த தீயணைப்பு – மீட்புத் துறையினர், முறையே 9, 12 வயதுடைய இரு சிறுவன்களையும் சுயநினவற்ற நிலையில் மீட்டனர்.
எனினும் அவர்கள் இறந்து விட்டதை மருத்துவக் குழு பின்னர் உறுதிப்படுத்தியது.
மேல் நடவடிக்கைக்காக உடல்கள் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டன.
உயிரிழந்த இருவரும் Che Syazwan Irwan Shah, மற்றும் Arshidayan Arijanto என அடையாளம் கூறப்பட்டது.