Latestமலேசியா

‘ஹஜ்’ பெருநாள்; பலியிடுவதற்கான ஆடுகளும் பசுக்களும் தயார்

புத்ரஜெயா, ஜூன் 3 – வருகின்ற ஜூன் 7-ஆம் தேதி ‘ஹஜ்’ (Aidiladha) பெருநாளை முன்னிட்டு, நடைபெறவிருக்கும் பலி சடங்குகளுக்கு மொத்தம் 38,804 பசுக்கள் மற்றும் எருமைகளும், 30,167 ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளும் தயாராக உள்ளதென்று வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் ஆடுகள் மற்றும் மாடுகளைத் தவிர்த்து, வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதென்று அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் உணவு பாதுகாப்பு அமைச்சு, தீபகற்ப மலேசியா முழுவதும், 40 தனியார் இறைச்சி கூடங்களுக்கு DVS உரிமங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘இபாடா கொர்பான்’ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, DVS ஆல் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டுமென்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!