
183 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் சென்ற
JeJu Air Co விமானம் வியட்நாமில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
B737-800 விமானத்தை உள்ளடக்கிய JeJu Air விமானம் , Incheon அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை மணி 12:50 அளவில் Danang அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஓடுபாதையில் taxiing ஓடிக்கொண்டிருந்தபோது, விமானம் ஓடுபாதையின் வலதுபுறத்தில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தில் சிறிது நேரம் விலகி மீண்டும் ஓடும் பாதைக்குத் திரும்பியது.
இந்த சம்பவத்தில் விமானத்தின் தரையிறங்கும் gear tyreகளில் ஒன்று கிழிந்தது.
அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, அந்த விமானத்தின் டயரை Jeju Air மாற்றியது.
தென் கொரியாவிலிருந்து மாற்று விமானம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து 14 மணி நேர தாமதத்திற்குப் பிறகு புதன்கிழமை மாலை மணி 4.08க்கு டானாங்கிலிருந்து மற்றொரு விமானம் புறப்பட்டது.
ஓடுபாதையிலிருந்து விமானம் விலகியதற்கான காரணத்தை தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சு விசாரித்து வருகிறது.