
பூச்சோங், மே 29 – நேற்றிரவு, தாமான் பண்டார் புத்ரியிலுள்ள, பொழுதுபோக்கு மையமொன்றில் சிலாங்கூர் குடிவரவுத் துறை (JIM) மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில் சட்டவிரோத குடியேறிகள் உட்பட பல்வேறு குற்றப்பின்னணி கொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொழுது போக்கு மையத்தின் இரகசிய இரும்பு கதவுகள், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடைக்கப்பட்டு, 11 வியட்நாமிய மற்றும் லாவோசிய ஆண்களையும், 4 தாய்லாந்து பெண்களையும் மற்றும் 17 முதல் 50 வயதுக்குட்பட்ட 2 வங்கதேச ஆண்களையும் தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ்கள் வைத்திராத குற்றத்திற்காக கைது செய்துள்ளனர் என்று சிலாங்கூர் குடிவரவுத்துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமருதீன் (Mohamed Firdaus Mohamed Abbu Bakar) தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும், குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டினரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக குடிவரவுத்துறை தொடர்ந்து இத்தகைய அதிரடி பரிசோதனைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறியுள்ளார்.