
சுலாவேசி ஏப்ரல்-22, இந்தோனேசியா, சுலாவேசியில் வீட்டில் சேமித்து வைத்திருந்த 22 மில்லியன் ரூப்பியா அல்லது 5,729 ரிங்கிட் பணம் காணாமல் போனதால் விரக்தியடைந்த ஆடவருக்கு, திருடன் யாரென்று தெரிந்தது அதை விட அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது வேறு யாருமல்ல, வீட்டில் ‘குடித்தனம்’ நடத்தி வந்த எலியே.
வீட்டின் பளிங்குத் தரையின் ஒரு மூலையில் இருந்த துவாரத்தை உடைத்து தோண்டிய போதே அது வெளிச்சத்துக்கு வந்தது.
காணாமல் போன பணம் கத்தை கத்தையாக அங்கிருந்தது கண்டு குடும்பமே ஆர்ப்பரித்தது.
சில பண நோட்டுகள் மட்டுமே சேதமடைந்திருந்தன; மற்றவை இன்னும் பயன்படுத்தக் கூடிய நிலையிலேயே இருந்ததால் குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.
‘திருட்டு’ வேலையைப் பார்த்த எலி என்ன ஆனது எனத் தெரியவில்லை.
Makasar_Info என்ற Instagram பக்கத்தில் பதிவேற்றப்படட் அவ்வீடியோவுக்கு likes-களும் கருத்துகளும் குவிந்து வருகின்றன