
சிரம்பான், ஜூன்-26 – கடந்த வாரம் மதுபோதையில் 30 வயது ஆடவரர் ஒருவரை வெட்டுக் கத்தி மற்றும் ஹாக்கி மட்டையால் அடித்துக் காயப்படுத்தியதாக, 3 நண்பர்கள் இன்று சிரம்பான் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்
எனினும் மூவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரியிருக்கின்றனர்.
ஞாயிற்றுக் கிழமை விடியற்காலை 2.30 மணிக்கு நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் ஒரு துரித உணவகத்தின் முன் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படி, அல்லது அவற்றில் 2 தண்டனைகள் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், ஒருவர் 5,000 ரிங்கிட்டிலும், இதர இருவர் தலா 7,000 ரிங்கிட்டிலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், சம்பவத்தன்று அதே இடத்தில் அதே நேரத்தில் ஆயுதமேந்தி கலவரத்தில் ஈடுபட்டதாக, அம்மூவரும், பாதிக்கப்பட்ட நபரரும் இன்னொரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அக்குற்றச்சாட்டை, இருவர் ஒப்புக் கொள்ளாத நிலையில் அவர்களுக்கு, 2,500 ரிங்கிட்டில் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால், இதர இருவர் ஒப்புக் கொண்டதால், 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் செலுத்தத் தவறினால் 5 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென மேஜிஸ்திரேட் அறிவித்தார்.