Latestமலேசியா

கெந்திங் மலை சூதாட்ட மையத்தில் தகராறு; மூன்று வெளிநாட்டினர் தடுத்து வைப்பு

கெந்திங் மலையில் ஏப்ரல் 17ஆம் தேதி சூதாட்ட விடுதியில் நிகழ்ந்த சண்டைக்கு, Holiday விடுதியில் ஹோட்டல் அறையைப் பெறத் தவறியதால் ஏற்பட்ட வாக்குவாதமே காரணம் என தெரியவந்துள்ளது.

வைரலான இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ 32 முதல் 49 வயதுக்குட்பட்ட ஒரு பெண் உட்பட மூன்று வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 17 ஆம் தேதி அதிகாலை 3.05 மணியளவில் கெந்திங் ஹைலேண்ட்ஸ் துணை போலீஸ்காரர் அந்த சந்தேக நபர்களை கைது செய்ததாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent ஸைஹான் முகமட் காஹார் (Zaihan Mohd Kahar ) தெரிவித்தார்.

கேசினோவிற்குள் நடந்த மோதலில் அவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த 42 வினாடி வீடியோவும் சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது.

ஹோட்டல் அறைக்கு 1,500 ரிங்கிட் கட்டணம் செலுத்தப்பட்ட போதிலும் அறையை பெற முடியதாத காரணத்தில் ஏற்பட்ட அதிருப்தியே இந்த சண்டைக்கு காரணம் என விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக Zaihan வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தொந்தரவு செய்தது, அத்துமீறி நுழைந்தது மற்றும் காலாவதியான வேலை பெர்மிட் ஆகியவற்றிற்காக அம்மூவரும் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

சம்பவம் விசாரணையில் இருப்பதால், வழக்கு தொடர்பாக எந்தவிதமான ஊகங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவர் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!