Latestமலேசியா

மாடு திருடிய புகாரில் ஜாசினில் இரணுவ வீரர்கள் கைது

ஜாசின், மே-26 – மலாக்கா, ஜாசின், சிம்பாங் பெக்கோவில் மாடுகளைத் திருட முயன்ற 2 இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர்.

26 வயதான அவ்விருவரும் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு செம்பனைத் தோட்டமொன்றின் மாட்டுக் கொட்டகையில் அத்துமீறியதாக, ஜாசின் போலீஸ் கூறியது.

சந்தேக நபர்கள் புரோட்டோன் பெர்சோனாவில் வந்திறங்கியதை, மாட்டுக் கொட்டகை உரிமையாளர் பார்த்து விட்டார்.

ஒருவர் கொட்டகையினுள் நுழைய இன்னொருவர் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.

பிறகு கிராம மக்கள் துரத்தஇருவரும் காரிலேறி தப்பியோடினர்.

அதன் போது ஆற்றுத் தடுப்பில் மோதி தடம்புரண்ட காரை அங்கேயே விட்டு விட்டு, இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் இருவரும் போலீஸிடம் சரணடைய வந்த போது கைதுச் செய்யப்பட்டனர்.

விசாரணையை முழுமைச் செய்வதற்காக அவர்களின் தடுப்புக் காவலை நீட்டிக்க போலீஸ் இன்று நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!