Latestமலேசியா

அனைத்து புதிய நெடுஞ்சாலைகளிலும் வனவிலங்கு சுரங்கப்பாதைகள் கட்டப்படும் – KKR

கோலாலம்பூர்,மே 13 – நாட்டில் கட்டப்படும் அனைத்து புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வனவிலங்குகள் கடக்கும் சுரங்கப்பாதைகள் பொருத்தப்படும் என்று பொதுப்பணி அமைச்சு (KKR) வலியுறுத்தியுள்ளது.

இந்நடவடிக்கை தைப்பிங் மற்றும் புருவாஸ் நெடுஞ்சாலையில் விலங்கு கடக்கும் கல்வெர்ட்டை நிர்மாணிப்பதன் மூலம் தொடங்கியது என்றும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடமிருந்து (PERHILITAN) ஒப்புதலை பெற்றது என்றும் KKR குறிப்பிட்டுள்ளது.

மேலும் வனவிலங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வனவிலங்குத் துறையுடனான நெருங்கிய ஒத்துழைப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வனவிலங்கு கடவைகள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளைக் கடந்து செல்லும்போது, ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக இருக்கவும், மெதுவாகச் செல்லவும் KKR கேட்டுக்கொள்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!