
ஷா அலாம், ஜூன் 9 – கிரிக், Jalan Raya Timur 3 – Barat சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் தாங்கள் சொந்தமாகவே UPSI திருப்புவதற்கு வாடகைக்கு பஸ் ஏற்பாடு செய்தாகவும் பல்கலைக்கழகம் இந்த ஏற்பாட்டில் ஈடுபடவில்லையென அப்பல்கலைக்கழகத்தின் உதவி வேந்தரான பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் அமின் முகமட் தாப் ( Md Amin Md Taff 3) உறுதிப்படுத்தினார். ஜெர்த்தே மற்றும் உலு திரெங்கானு சுற்றுவட்டாரம் மற்றும் Kampung Halaman னைச் சேர்ந்த அந்த மாணவர்கள் Hari Raya ஹாஜ் விடுமுறைக்கு பின் தங்களது பல்கலைக்கழக வளாகத்திற்கு திரும்புவதற்கு சொந்தமாகவே வாடகை பஸ்ஸை ஏற்பாடு செய்ததாக அவர் கூறினார். இந்த ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் அல்லது பணியாளர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக நலன் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவசர உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக 24 மணிநேரம் செயல்படும் சிறப்பு நடவடிக்கை மையத்தைம் UPSI அமைத்துள்ளது. UPSI நடவடிக்கை குழு தற்போது ஈப்போவிலுள்ள Raja Permaisuri Bainun மற்றும் Gerik மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆலோசகர் சேவை மையமும் , சிறப்பு நடவடிக்கை யைமும் ஜெர்த்தே மற்றும் உலு திரெங்கானு சமூக தலைவர்களின் ஒத்துழைப்போடு UPSI வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.