
கோலாலம்பூர், பிப் 3 – அரசாங்க கிளினிக்குகளில் சேவைக்காக நோயாளிகள் மூன்று மணி நேரம் காத்திருப்பது 30 நிமிடங்களாக குறைந்ததில் சுகாதார அமைச்சு வெற்றி பெற்றுள்ளதாக அதன் அமைச்சர் சுல்கெப்லி அகமட் (Dzulkefly Ahmad) தெரிவித்திருக்கிறார்.
சுகாதார சேவையில் இலக்கியல் உருமாற்றம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது. வேலையை நிறைவேற்றுவதற்கு வரைப்பட்ட அனைத்து திட்டங்களையும் செயல்பட வேண்டிய ஆண்டாக 2025ஆம் ஆண்டு இருப்பதாக அவர் கூறினார்.
அரசாங்க கிளினிக்குகளில் நோயாளிகளின் காத்திருக்கும் நேரத்தை மூன்று மணி நேரங்களிலிருந்து 30 நிமிடங்களாக குறைப்பதில் நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
2007 முதல் 2022 ஆம் ஆண்டுவரை 107 கிளினிக்களில் மூன்று மணி நேரமாக இருந்த காத்திருக்கும் நேரத்தை கடந்த ஆண்டு 159 கிளினிக்குகளாக அதிகரித்துள்ளளோம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சம்பந்தப்பட்ட கிளினிக்களில் 48 .6 விழுக்காடு நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்த ஆண்டு பொருத்தமான ஒன்றாகும் என X தளத்தில் சுல்கெப்லி பதிவிட்டுள்ளார்.