
ஜோகூர் ஸ்கூடாய், தாமான் முத்தியாரா எமாஸில் ஓர் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் 19 பேர் கைதாகியுள்ளனர்.
சனிக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
கடையில் பானம் அருந்திக் கொண்டிருந்த தனது 3 ஆண் நண்பர்கள் பாராங் கத்தியாலும் பிரம்பாலும் தாக்கப்பட்டதாக, பெண்ணொருவர் புகார் செய்தார்.
இதையடுத்து 13 முதல் 46 வயதிலான சந்தேக நபர்கள் கைதானதாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமராசன் தெரிவித்தார்.
அவர்களில் அறுவருக்குப் பழையக் குற்றப்பதிவுகள் உண்டு.
எனினும் எவரும் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை.
பழிவாங்குவதே அத்தாக்குதலுக்குக் காரணம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குமராசன் சொன்னார்.
மே 18 முதல் 7 நாட்களுக்கு அவர்கள் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுதம் வைத்திருந்தது மற்றும் கலவரத்தில் ஈடுபட்டது ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெறும்.