
மாச்சாங், டிசம்பர்-8 – கிளந்தான், மாச்சாங்கில் வெடிப்பொருட்களை உட்படுத்திய நடவடிக்கை எதுவும் கண்டறியப்படவில்லை என போலீஸ் கூறியுள்ளது.
தீச்சம்பவமும் பதிவாகவில்லை என, மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் யூசோஃப் மாமாட் (Datuk Yusof Mohammad Mamat) கூறினார்.
எனவே மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கும் வகையில் யூகங்களைக் கிளப்ப வேண்டாமென அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
மாச்சாங்கில் சனிக்கிழமை விடியற்காலை வெடிப்புகளும் வலுவான நில அதிர்வும் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் முன்னதாக செய்திகள் வைரலாகின.
கம்போங் கெலாவேவில் (Kampung Kelaweh) உள்ள தனது வீட்டில் பயங்கர சத்தம் கேட்டதாக ஒரு பயனர் சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் சிலரும் அதே போன்ற கருத்துக்களை பதிவேற்றியிருந்த நிலையில், எதனால், எங்கிருந்து அச்சத்தம் வந்தது என அவர்கள் குழம்பி போயினர்.