
கோலாலம்பூர், மே 28 – கடந்த மார்ச் 20-ஆம் தேதியன்று, தாமான் ஸ்ரீ ஹர்தாமாஸில், தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான 150,000 ரிங்கிட் பணத்தை, 65 வயதான ‘நிங் யாம் கீ’-யின் வங்கிக் கணக்கில் மறைத்து வைக்க உதவியதாக சந்தேகிக்கப்படும், 25 வயது லோ சின் கியோங், இன்று நீதிமன்றத்தில் தன் குற்றத்தை மறுத்துள்ளார்.
நீதிமன்றத்தில், ‘லோ’ தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், அவருக்கு முதலில் 30,000 ரிங்கிட் ஜாமீன் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் தரப்பு வழக்கறிஞர், லோவின் குறைந்த வருமானத்தைக் காரணங்காட்டி குறைந்த ஜாமீன் தொகையை விண்ணப்பித்தபோதும், நீதிமன்றம் 12,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை மட்டுமே அனுமதித்துள்ளது.
தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படுமென்று நம்பப்படுகின்றது.