
சுலாவேசி, மே-24 – இந்தோனேசியாவின் தென் சுலாவேசியில் சொந்த மாமியாரையே மருமகன் கர்ப்பமாக்கிய விபரீதம் நடந்துள்ளது.
2024 தொடக்கத்தில் நிகழ்ந்த இந்த ‘வினோத’ சம்பவம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கணவர் இறந்த பிறகு தனிமையில் இருந்த மாமியாருடன் மருமகன் நெருக்கம் காட்ட, பின்னர் இருவரும் கள்ள உறவு வைத்துக் கொண்டனர்.
கடைசியில் மாமியார் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விட்டார்.
விஷயம் அம்பலமானதும் வேறு வழியின்றி இரு தரப்பும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
அதாவது மனைவியை விவாகரத்து செய்து விட்டு மாமியாரை முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று…
மருமகனும் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, ‘முன்னாள்’ மாமியாரான ‘இன்னாள்’ புது மனைவியுடன் ‘சந்தோஷமாக’ வாழ்ந்து வருகிறாராம்.
சம்பந்தப்பட்ட தரப்புகளே சமாதானமாகப் போய் விட்டதால், பிரச்னை பெரிதாக்கப்படவில்லை என மாவட்ட போலீஸ் கூறியது.
என்றாலும், திருமண பந்தத்திற்கு வெளியே தவறான உறவைத் தேடிப் போவது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை புரிந்து, அதிலிருந்து ஒதுங்கி நிற்குமாறு போலீஸ் அறிவுரை கூறியது.
முன்னாள் மனைவிக்கு மாற்றான் தந்தையான ஆடவரின் இக்கதை தற்போது அந்நாட்டில் பேச்சுப் பொருளாகியுள்ளது.