
புக்கிட் மெர்தஜாம், ஏப்ரல் 24- கடந்த இரண்டு நாட்களாக வலைத்தளத்தில் வைரலாகியுள்ள, P-hailing எனும் உணவு அனுப்பும் செயலியின் மூலம் வாடிக்கையாளர் ஒருவரிடம் இனவாத கருத்துகள் அடங்கிய செய்தியை அனுப்பியதாகக் கூறப்படும் பெண் உணவு டெலிவரி ஒருவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட அமுதா எனும் அப்பெண் ஆசிரியர், தமது மனத்தை புண்படுத்தும்படியான இனவாத செய்திகளை அனுப்பிய அந்த ஓட்டுநர் மீதும், புகார் அளித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாத நிறுவனத்தின் மீதும், தமக்கு ஏற்பட்ட அதிருப்தியை தமது இன்ஸ்டாகிராமில் (Instagram) பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை அமைச்சர், ஆரோன் அகோ டாகாங் (Aaron Ago Dagang), அந்த உணவு அனுப்பும் ஓட்டுநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
ஆக இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்