Latestமலேசியா

பாகிஸ்தானில் தலைமையாசிரியர் பிரம்பினால் தாக்கியதால் மாணவன் உயிரிழந்தான்

பெஷாவார், ஜூன் 3 – பாகிஸ்தானில் Khyber மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரால் பிரம்பினால்
தாக்கப்பட்ட 10 வயது மாணவன் உயிரிழந்தான்.

தலை, கழுத்து, முகம் மற்றும் முதுகில் பலமுறை தாக்கப்பட்டதால், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Khyalmat Khan என்ற மாணவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் Waar Ahmed கைது செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தினால் உள்ளூர் மக்கள் ஆத்திரம் அடைந்ததோடு , பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்து கொடுமைப்படுத்தும் உரிமை எந்த ஆசிரியருக்கும் இல்லையென Khyber மாவட்ட போலீஸ் அதிகாரி Rai Mazhar Iqbal வலியுறுத்தினார்.

மேலும் இந்த நடவடிக்கை ஆசிரியர் தொழிலின் புனிதத்தை கெடுப்பதாகவும் அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!