
கோலாலம்பூர், மே 9- உள்ளூர் அரிசியை சந்தையில் சேமித்து வைப்பதைத் தவிர்ப்பதற்கு, உள்ளூர் வெள்ளை அரிசி (BPT) கொள்முதல் வரம்பை 2 பாக்கெட்டிலிருந்து இருந்து 5 பாக்கெட்டாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
மே 5 ஆம் தேதி நிலவரத்தின்படி, நாடு முழுவதும் உள்ளூர் வெள்ளை அரிசி மானியங்கள் வழங்கப்பட்டபோதும் வாடிக்கையாளர்களரிடமிருந்து நல்ல வரவேற்பு இல்லை என்று வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு தெரிவித்தார். இந்நிலைக்கு வாடிக்கையாளர்கள், பிராண்டின் அடிப்படையில் அரிசியைத் தேர்வு செய்வதுதான் காரணமாகின்றது என்கிறார்.
வாடிக்கையாளர்களின் அரிசி தேர்வு முறையை மாற்ற, ‘நான் உள்ளூர் அரிசியைத் தேர்வு செய்கிறேன்’ என்ற கருப்பொருளைக் கொண்ட ஒரு தேசிய பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி போதுமான உணவு விநியோகத்தை உறுதி செய்வதோடு, நாட்டின் அரிசித் தொழிலை மேலும் நிலைபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் சாபு.